மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday 9 September 2013

யு.பி.எஸ்.ஆர் தயார்நிலை

தமிழ் மொழி தாள் 2. ( 11.09.2013)

12.15 pm to 1.30pm

நேர ஒதுக்கீடு மிகவும் முக்கியம். திறந்த முடிவு கட்டுரைக்குப் புள்ளிகள் அதிகம் என்பதால் அதில் நேரத்தைக் கொஞ்சம் அதிக செலவிடுவது அவசியம். அடுத்ததாக சிறுகதை பகுதியாகும். இறுதியாக இருக்கும் 10 நிமிடத்தில்கூட வாக்கியம் அமைத்துவிடலாம். 

திறந்த முடிவு கட்டுரை : குறைந்தது 40 நிமிடங்கள் 

சிறுவர் சிறுகதை (வழிகாட்டிக் கட்டுரை) - 25 நிமிடங்கள்

வாக்கியம் அமைத்தல் : 10 நிமிடங்கள்

இஃது ஓர் ஆலோசனை மட்டுமே. வாக்கியம் அமைத்தலை நீங்கள் கடைசியாகக்கூட செய்யலாம், காரணம் இறுதியாக 10 நிமிடங்கள் இருந்தாலும் வாக்கியம் அமைத்தலைச் செய்ய முடியும். ஆனால், இறுதி 10 நிமிடங்களில் அவசர அவசரமாகத் திறந்த முடிவு கட்டுரையைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தாலும் நேர்த்தியில்லாமல் போக வாய்ப்புண்டு. ஆகவே, முதலில் தாள் கிடைத்ததும் திறந்த முடிவு கட்டுரை பகுதியைச் செய்ய முயற்சிக்கவும். அந்தப் பகுதியில்தான் புள்ளிகள் அதிகம்.

சிறுகதைக்கு அதிக நேரம் செலவழித்து, இறுதியில் 30 புள்ளிகளுக்கான பகுதியில் நேரப்பற்றாகுறையால் மாணவர்கள் புள்ளிகள் இழக்க நேரிடும். இது போன்ற தவறுகளைக் களையவே இந்த ஆலோசனை. வெற்றி நிச்சயம்.

நாளை யு.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதவிருக்கும் அனைத்துத் தமிப்பள்ளி மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள். பயமின்றி துணிச்சலுடன் சோதனையை எதிர்க்கொள்ளவும். வெல்க.

உங்கள் ஆசிரியர்: கே.பாலமுருகன்

Saturday 7 September 2013

நான் ஒரு சட்டை : தன்கதை & கற்பனை கட்டுரை வழிகாட்டி நூலிலிருந்து ஒரு பகுதி

அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளிவரவிருக்கும் என்னுடைய தன்கதை & கற்பனை கட்டுரை தொடர்பான வழிகாட்டி நூலின் ஒரு மாதிரி கட்டுரையை இங்கே இணைத்துள்ளேன். என் அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதோ அல்லது சரியான மூலத்தைக் குறிப்பிடமால் சுரண்டல் செய்வதும் கடுமையான குற்றமாகும். எந்தப் புத்தகம் எந்த அகப்பக்கத்திலிருந்து யாரிடமிருந்து பெற்றீர்கள் என்ற தகவலுடன் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி.

தன்கதை தொடர்பான பல்வேறான குழப்பங்கள் நாடு முழுக்க இருக்கின்றது. விரைவில் வெளிவரும் இந்த நூல் அனைத்துக் குழப்பங்களைத் தவிர்க்கும்.

கே.பாலமுருகன் ( 0164806241)








Thursday 5 September 2013

தன்கதை: அமைப்பும் மாற்றமும்

யு.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கவனத்திற்கு, தன்கதை: எல்லாம் பொருள்களும் இறுதியில் குப்பை மேட்டில்தான் கிடக்கும். கொஞ்சம் மிஞ்சினால் கால்வாய். அடுத்ததாக ஏற்றுமதி செய்யப்படும் எல்லாம் பொருள்களும் சீனக் கடைகளுக்குத்தான் கொண்டு செல்லப்படும். அதுவும் கண்ணாடி பேழையை எங்கள் காலத்திலிருந்து இன்னும் விட்டு வைக்கவில்லை. தெய்வங்களே, கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். சிறுவர்களின் எல்லைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்களால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை என்பதற்காக, குப்பை மேட்டையும், கால்வாயையும், சீன முதலாளிகளையும் கண்ணாடி பேழைகளையும் சட்டமாக்காதீர்கள், கட்டாயமாக்காதீர்கள்.

கற்றுக் கொள்வதிலும் பெற்றுக்கொள்வதிலும் வயதும் அனுபவமும் மிகப்பெரிய அகங்காரங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சிறியவர்களிடமிருந்து பெறுவதையும் அனுபவம் குறைவானவர்களிடடமிருந்து கற்றுக்கொள்வதையும் பெரிய கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுகிறது. இறுதியில் பாதிப்பிற்க்குள்ளாகுவது மாணவர்கள்தான். 1. கட்டுரையில் உரையாடலைப் பயன்படுத்துவது எங்கனம் சாத்தியம்? தன்கதை என்பது வாழ்க்கை வரலாறு. பொருளின் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக மட்டுமே எழுத முடியும். 2. கட்டுரையில் பின்னோக்கு உத்தி எங்கனம் பயன்படுத்த இயலும்? உத்தி என்பது கதைக்குரியது. வசனம்/உரையாடல் என்பதும் கதையில் பாவிக்கக்கூடியது. இதை இரண்டையும் கட்டுரையில் எழுதுமாறு காலம் காலமாகச் சொல்லித் தருகிறோம் என்பதற்காக அதனை மாற்ற முடியாது பிழையாகச் சொல்லிக்கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் அகங்காரங்களை விட்டுக்கொடுக்க முடியாது என இவர்கள் பிடிக்கும் முரடு யாரைப் பாதிக்கப் போகின்றது? தொடர்பிற்கும் விவாதத்திற்கும்: 0164806241