மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Saturday 3 September 2016

அனைத்து யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கும் வாழ்த்துகள்








அனைத்து யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கும் சிறப்பாகத் தமிழ்மொழிச் சோதனையை எழுதி முடித்தமைக்கு என் வாழ்த்துகள். தன் வரலாறு கட்டுரையை நீங்கள் அனைவரும் சிறந்த கற்பனைவளத்துடன் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி. நான் வழங்கிய மாதிரிக் கட்டுரைகள் உங்களுக்கு உறுத்துணையாக இருந்திருக்கும் என நம்புகிறேன் வாழ்கத் தமிழ். சுடர் விடுவோம்.

கே.பாலமுருகன்
யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி வலைத்தலம்.

Monday 29 August 2016

தமிழ்மொழிக் கட்டுரை வழிகாட்டல் 2016 - யூ.பி.எஸ்.ஆர் சோதனை

இத்துடன் கட்டுரைக்கான சில பொதுவான வரைவிலக்கணங்களை இணைத்துள்ளேன்.






to download pdf copy click here:


Thursday 25 August 2016

தமிழ்மொழிக் கருத்துணர்தல் - இறுதிநேர விளக்கம்/ மாதிரிகள்

அன்பான ஆசிரியர்களே/மாணவர்களே,

பல ஆண்டுகள் தமிழ்மொழி ஆறாம் ஆண்டு ஆசிரியராகவும், தமிழிமொழிப் பயிற்றுனர், தமிழ்மொழியில் திறமிகு (Guru Cemerlang) பதவியை வகிப்பதாலும் இத்தளத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதனைக் கொண்டு மலேசியாவிலுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியும் வருகிறேன். இன்னும் சில நாட்களில் தேர்வெழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆசிரியரின் மனமார்ந்த வாழ்த்துகள். பதறாமல் இச்சோதனையை நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்க்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இத்துடன், தமிழ்மொழிக் கருத்துணர்தலில் மாணவர்கள் கடைசி நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியத்தைச் சுருக்கமாக எழுதியுள்ளேன். வாசித்துப் பயன்பெறவும். நன்றி

கே.பாலமுருகன்






பதிவிரக்கம் செய்வதற்கு இந்த லின்கை அழுத்தவும். to download pdf copy:

https://www.mediafire.com/?stykqkafl8svutv

Saturday 20 August 2016

தன் வரலாறு: நான் ஒரு பள்ளிக் காலணி


















முன்னுரை

                என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் தான் ஒரு பள்ளிக் காலணி.



அறிமுகம்

       என் பெயர் ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக இருப்பேன். எனக்கு இரண்டு தனித்தனியான உடல்கள் இருக்கும். என் உடலின் மேல் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிற்றைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை விட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.

பிறப்பு/ செய்யப்பட்ட விதம்

               நான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் கண்கவரும் வகையில் அழகாகக் காட்சியளிப்பேன். என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள்.  என்னை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள். இருள் என்னைச் சூழந்து கொண்டது.

பயணம்

       எங்களையெல்லாம் பெட்டி பெட்டியாகக் கனவுந்தில் ஏற்றினர். கரடு முரடான ஒரு பாதையில் அக்கனவுந்து சென்றது. பின்னர், எங்களை ஏற்றிச் சென்ற கனவுந்து ஒரு காலணி கடைக்கு வந்து சேர்ந்தது. 

விற்பனை

அக்கடைக்காரர் எங்களையெல்லாம் ரிங்கிட் மலேசியா 4000 காசோலையைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டார்.  கடைக்காரர் என் மீது ரிங்கிட் மலேசியா 50.00 என்ற விலை அட்டையை ஒட்டினார். என்னைக் கடைக்கு வருபவர்கள் வாங்குவார்கள் என நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக  வழங்குவதற்காக  ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து என்னையும் இன்னும் சில நண்பர்களையும் வாங்கிச் சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 


எஜமான்

     அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். எனக்கு வெட்கமாக இருந்தது. அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 20 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.

          குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன். 

பயன்பாடு

       அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும். அவன் என்னை மாலையில் பந்து விளையாடவும் பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடச் செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் போய்விடும்.

         
அனுபவம்

    ஒரு நாள் குமுதன் பள்ளியின் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் என்னை அணீந்து கொண்டு கலந்து கொண்டான். எனக்கு முதலில் ஓடுவதற்குப் பயமாக இருந்தது. சுடும் வெயிலில் என் உடல்கள் சூடு தாளாமல் உஷ்ணம் ஆகின. நான் எரிச்சலைத் தாங்கிக் கொண்டு என் எஜமானரின் வெற்றிக்காகப் போராடினேன். குமுதன் அந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றி பெற்றான். என்னை அணிந்து கொண்டு அவர் பரிசை வாங்கும்போது எனக்கும் பெருமையாக இருந்தது.

தற்போதைய நிலை


        சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். பின்னர், என் வாயைத் தைத்து அணிந்தான். இருந்தபோதும் நாளாக நாளாக என் தோல் அதன் சக்தியை இழந்து காணப்பட்டது. எப்பொழுதாவது திடலில் காற்பந்து விளையாட மட்டும் அவன் என்னை அணிந்து வருகிறான். உடலெல்லாம் கருமையடைந்து துர்நாற்றம் வீச நான் அவனுக்காக்க் கடுமையாக உழைத்து வருகிறேன்

ஆக்கம்: கே.பாலமுருகன்

Monday 25 July 2016

தமிழ்ப்பள்ளிகளுக்கான இலக்கண - செய்யுள் மொழியணிக்கான விளக்கவுரை - 2016 (கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு)

நன்றி: கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, கல்வி அமைச்சு. Terima Kasih Bahagian Pembangunan Kurikulum, Unit Bahasa Tamil.

ஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான இலக்கணம், செய்யுள், மொழியணிக்கான விளக்கவுரை- கல்வி அமைச்சு, 2016.



to download Buku Panduan Tatabahasa, seyyul dan Mozhiyani SJKT:

https://www.mediafire.com/?5f5znbsh65la7mr

Sunday 24 July 2016

Kertas Percubaan Bahasa Tamil Negeri Kedah 2016 - கெடா மாநிலம் தமிழ்மொழி முன்னோட்டச் சோதனை


இத்தாள்களைத் தயாரித்த நன்றிகுரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கெடா மாநில ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.



To download Bahssa Tamil Penulisan Percubaan Negeri Kedah 2016

https://www.mediafire.com/?2bcjhuvblhl54ds

To download Bahssa Tamil Pemahaman Percubaan Negeri Kedah 2016

https://www.mediafire.com/?dcnmyf6oxp2zz9j

Monday 18 July 2016

தன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)


ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், இந்த மாதிரிக் கட்டுரை ஓர் உதாரணத்திற்காகவும் வாசிப்பிற்காகவும் எழுதப்பட்டது. இதே கட்டுரையைப் பல கோணங்களிலும் சிந்தித்து எழுதலாம். மாணவர்கள் தங்களுக்கு ஏற்றதைப் போல சுருக்கமாகவும் எழுதலாம். இக்கட்டுரை அவர்களின் வாசிப்பை மேலும் வளப்படுத்தும் என நம்புகிறேன்.

- கே.பாலமுருகன், தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்




To download the 'தன் வரலாறு: நான் ஒரு நாளிதழ்' click here:

https://www.mediafire.com/?mrhlk4c9lsbyb7w


குட்டி எழுத்தாளர் சு.தரணியின் 'குகைக்குள் ஓர் அரண்மனை' - மர்மக் கதை


கிம்மாஸ் நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளியின் பயிலும் மாணவர் சு.தரணியின் கைவண்ணம் இது. எனது இரண்டு சிறுவர் நாவல்களையும் வாசித்து உருவான எனது சிறுவர் வாசகர் அவர். அப்பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவராகவே ஆர்வத்துடன் எழுதி கொடுத்த மர்மக் கதை இது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் வாசிக்க அதனை இங்கே பதிவிடுகிறேன். உங்கள் மாணவர்களின் சிறுகதைகள் இருந்தாலும் அனுப்பி வைக்கலாம்.



சிறுகதை: குகைக்குள் ஓர் அரண்மனை

மேகம் ஒரு கருமையான காகத்தைப் போல காட்சி கொண்டிருந்தது. அப்போது தரணியும் தரணியின் நண்பர்களும் மிதிவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளித் திடலுக்கு விளையாடச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தரணி, “டேய்ய்ய்.. வாங்கடா! காட்டு வழியாகப் போலாம்... அன்னாடம் இதே பாதைத்தான்கடுப்பா இருக்கு,” என்று கூறினான்.

உடனே மதன், “ஆமாம்டா. தரணி சொல்றதும் சரிதான்,” என்று கூறிவிட்டு காட்டுப் பாதைக்குள் சைக்கிளைச் செலுத்தினார்கள்.

அவர்கள் காட்டுப் பாதையாகப் போகும்போது நிறைய விலங்குகளின் சத்தங்கள் காட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தன. தரணிக்கு சற்று பயமாகவே இருந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தான். அப்போது சட்டென அவர்களின் பாதையின் நடுவே புலி ஒன்று படித்திருப்பதைக் கண்டனர்.

மூவரும் பதற்றத்தில், “ஐய்யயோ! புலி,” என்று அலறினார்கள்.

அந்தப் புலியும் அவர்களைத் துரத்தத் துவங்கியது. எங்கு ஓடுவதென்று தெரியாமல் நேராக அங்கிருந்த ஒரு குகைக்குள் நுழைந்தனர். மதன் தான் வைத்திருந்த கைவிளக்கை எடுத்துத் தட்டினான். வெகுதூரம் அக்குகைக்குள் போய்க் கொண்டிருந்தனர். மதன் அந்தக் கைவிளக்கால் சுற்றிலும் ஏதாவது இருக்குமா எனத் தேடினான். சட்டென ஒரு தங்க நாற்காலியும் ஓர் எலும்புக்கூடும் தென்பட்டன.

திடீரென்று அந்த நாற்காலியின் பின்னே ஓர் ஒளி தோன்றியது. அவ்வொளி பட்டதும் அந்த எலும்புக்கூடு எழுந்து நின்றது. அப்பொழுதுதான் அது ஒரு ராஜாவைப் போல காட்சியளிப்பது தெரிந்தது. திடீரென மதனின் கைவிளக்கும் பழுதாகிவிட்டது. குகையின் வாசலும் மூடும் சத்தம் கேட்டது. எங்கும் இருள். அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள். அப்பொழுது எதிரே இருந்த ஒரு சிலையைத் தரணி மோதி கீழே விழுந்தான். அப்பொழுதுதான் அது ஒரு பெரிய சிலை எனத் தெரிந்தது. அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றது.

என்னை ஏன் எழுப்பினீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என அச்சிலை கேட்டது.

நாங்க இந்தக் குகையெ விட்டு வெளில போகணும். புலி வெளில இருக்கு வேறகாப்பாத்த முடியுமா?” எனத் தரணி பயந்துகொண்டே கேட்டான்.

பயப்படாதீர்கள். இதுவொரு பழமையான அரண்மனை. இப்போது குகையாகவிட்டது. இதுக்கு இன்னொரு வாசல் இருக்கு, அதோ! அதன் வழியா போனால் நீங்கள் தப்பித்துவிடலாம்,” என அச்சிலை கூறியதும், மூவரும் தலை தெறிக்க அங்கு ஓடினர். கொஞ்சம் நேரத்தில் அக்குகையிலிருந்து வெளியாகும் வாசலும் வந்தது. மூவரும் வெளியேறி வீட்டை நோக்கி ஓடினர்.
டேய்ய்ய்! இனிமேல் கடுப்பா இருக்குனு காட்டுப் பாதையில வருவீங்க?” என மதன் கண்களை உருட்டிக் கொண்டே கேட்டான்.

யாரும் எந்தப் பதிலும் சொல்லாமல் ஓடுவதிலேயே குறியாக இருந்தனர்.


-            சு.தரணி, கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான்


 குட்டி எழுத்தாளர் சு.தரணியின் மர்மக் கதையை இங்கே பதிவிரக்கம் செய்யலாம்: https://www.mediafire.com/?8699464wm98focf

இதற்காகத்தானே சிறுவர் மர்ம நாவலை எழுதினேன், இதோ ஓர் எழுத்தாற்றல் ஒரு சிறுவனைக் கண்டறிந்தேன்.

தொகுப்பு: கே.பாலமுருகன்