மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday 4 May 2016

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை வெளிக்கொணரும் கவிதைகள்


1
எல்லாம் தீமைகளையும்
எரித்துவிட்டு
வெந்து நிற்கும்
தனித்த மரம்.

2

எல்லோரும் ஏறிச் சென்ற
பிறகும்
இன்னும் யாராவது ஏறுவார்கள்
எனக் காத்திருக்கும்
ஒற்றை ஏணி.





3

முடிந்துவிடும்
என நாள்தோறும்
நம்பிக்கையோடு சென்று
முடிக்கப்படாத ஏராளமான
வேலைகளுடன்  வீடு திரும்பும்
மிஞ்சிய பறவை.

4

எத்தனை கல்லடி
பெற்றாலும்
சிற்பியின் நடுக்கம் தழுவாத
ஆளுமை.

5

என்றாவது ஒருநாள்
நன்றி சொல்வதற்காகவாது மீண்டும் வருவார்கள்
என மாணவர்களுக்காக
எல்லாம் காலங்களிலும்
அதே இடத்தில்
காத்துக் கொண்டிருக்கும்
ஆசிரியர்கள்.

6

வெண்கட்டியிலேயே கரைந்த
கல் மண்டபத்தின்
வெண்மையில் தோய்ந்த
தூண்கள்.



அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை நினைவுக்கூறும் இந்நாளில் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்ளும் பழக்கத்திலிருந்து வெளிவந்து கூட்டாக இணைந்து செயல்படுவோம்.

- கே.பாலமுருகன்

No comments:

Post a Comment