மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Monday 23 May 2016

வாக்கியம் அமைத்தல்: பயிற்சியும் விளக்கமும்


கேள்விகளின் வழியாக வாக்கியம் அமைத்தல் பகுதியை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.

இது மெதுப்பயில் மாணவர்களுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

தனி வாக்கியம் அமைக்க வேண்டும் என்பதால் வாக்கியத்தில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை இருப்பதை உறுதி செய்தாக வேண்டும்.

எடுத்துக்காட்டாக: குமரன் செடிக்கு நீர் ஊற்றுகிறான்.

இவ்வாக்கியத்தில் குமரன்; எழுவாய் ஆகும்.


குமரன் செடிக்கு நீர் ஊற்றுகிறான்.

இவ்வாக்கியத்தில் செயப்படுபொருள் நீர் ஆகும். இதே வாக்கியத்தில் ஊற்றுகிறான் என்ற சொல் பயனிலை ஆகும்.

கேள்விகளின் வழியாக எப்படி வாக்கியம் அமைப்பது?


கீழ்க்கண்ட அட்டவணையைத் துணையாகக் கொண்டு கேள்விகள் அமைத்து வாக்கியத்தை நிறைவு செய்யவும்.

யார்?
வினைச்சொல் 
 பின்னணி ( எங்கே? எப்பொழுது? எதற்கு? யாருக்கு?)
விளக்கம் ( எப்படி? ஏன்?) ஏற்புடைய கேள்விகள்
 குமாரி
வீசுகிறாள் 
 பூங்காவில்...
குப்பைத் தொட்டியில்
தூய்மையைப் பேணுவதற்கு 
 திரு.முத்து
ஊற்றுகிறார் 
 பூங்காவிலுள்ள செடிகளுக்கு
 நீரை, அக்கறையுடன்













மாதிரி வாக்கியம்:

1. குமாரி தூய்மையைப் பேணுவதற்காகப் பூங்காவிலுள்ள குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் வீசுகிறாள்.

2. திரு.முத்து பூங்காவிலுள்ள செடிகளுக்கு அக்கறையுடன் நீர் ஊற்றுகிறார்.

( மேலும் மூன்று வாக்கியங்களை எழுதவும்.

ஆசிரியர்: கே.பாலமுருகன்

to download pdf : https://www.mediafire.com/?f2w3gpxzj27c9n2

2 comments:

  1. மிக்க நன்றி.வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு...

    ReplyDelete