மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR

திறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)

Wednesday 9 September 2015

2015 யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தாள் இரண்டு குறித்து:



சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பகாங் மாநிலத்தின் தேர்வொன்றில் 'நான் விந்தை மனிதனானால்' எனும் தலைப்பு வெளியாகி கொஞ்சம் சர்ச்சையும் உருவானது. ஆகவே, நான் என் யூ.பி.எஸ்.ஆர் வலைத்தலத்தில் உருமாறுவதற்கும் விந்தை மனிதனாக மாறுவதற்குமான விளக்கத்தைக் கொடுத்திருந்தேன். ஆனால், இன்று உருமாறுதல் தலைப்பாக வரும் என நினைத்துப் பார்க்கவில்லை. இருப்பினும், அந்த விவாதம் இன்று பலருக்கு நன்மை அளித்ததாகத் தகவல் கிடைத்தது. பலர் அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.
அடுத்ததாக, இவ்வாண்டு நான் எழுதிய கற்பனைக் கட்டுரைகள் அடங்கிய நூல் ' அதிசயத் தீவும் அற்புதக் காலணியும் ' 6000 பிரதிகள் விற்பனையாகி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே சயமம் நிறைய மாணவர்கள் இவ்வாண்டு வெளிவந்த கற்பனைக் கட்டுரையைத் தலைப்பாக எடுத்திருப்பதாகப் பல ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாண்டு எனது முயற்சிகளுக்குக் கிடைத்த இரட்டிப்பான மகிழ்ச்சி இது. முயற்சிகள் மேலும் தொடரும். அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்தும் நன்றியும். நான்காண்டு காலமாக இயங்கி வரும் என்னுடைய யூ.பி.எஸ்.ஆர் வலைத்தலம்( http://btupsr.blogspot.com ) உங்களுக்குக் கைக்கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழித் தேர்வு தாள் ஒன்றில் வந்திருந்த சிறுகதை(படைப்பிலக்கியம்) எனது ' மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' எனும் சிறுவர் நாவலின் கடைசி பாகத்தில் வருவதைப் போன்று சிறுவன் ஆபத்துக்காகக் காரைச் செலுத்தும் கதையே. படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனையோ சிறுவர்கள்/ மாணவர்கள் அதனை வாசிக்கும்போது சிறுவர் நாவல் ஞாபகத்திற்கு வந்திருக்கும். வாசிப்பே நம் பிரதானம்.

- கே.பாலமுருகன்

No comments:

Post a Comment